மேலூர்
மேலூரை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி(வயது 52). இவர் திருவாதவூரில் வேலை பார்த்துவிட்டு மேலூருக்கு திரும்பி வந்துள்ளர். வரும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி கூலி தொழிலாளி சுப்பிரமணியிடம் 200 ரூபாயை பறித்து சென்றனர்.
இதைப்போலவே மற்றொரு இடத்திலும் வழிப்பறி நடைபெற்றது. மேலூர் நாகம்மாள்கோவில் பகுதியை சேர்ந்தவர் குமார்(47). இவர் ஆட்டுகுளம் கிராமத்தில் வயலுக்கு சென்றுவிட்டு சிவகங்கை ரோட்டில் மேலூருக்கு நடந்து வந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கத்திமுனையில் ரூ.250-ஐ பறித்து சென்றுள்ளனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.