வாலிபரிடம் நகை, செல்போன் திருட்டு

மதுரையில் வாலிபரிடம் நகை, செல்போன் திருடப்பட்டது.

Update: 2021-09-08 19:06 GMT
மதுரை,

மதுரை பசுமலை பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 34). சம்பவத்தன்று இவர் இறந்த அவரது உறவினரின் உடலை பார்ப்பதற்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். பின்னர் ஆஸ்பத்திரி அருகே நள்ளிரவு படுத்து தூங்கி விட்டார். காலையில் எழுந்து பார்த்த போது அவர் அணிந்திருந்த சுமார் 3 பவுன் நகை மற்றும் செல்போனை காணவில்லை. யாரோ அதை திருடி சென்று விட்டனர். இது குறித்து அவர் மதிச்சியம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்