மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி சொர்ணவள்ளி (வயது 36). சம்பவத்தன்று இவர் அவனியாபுரம் செம்பூரணி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் திடீரென்று சொர்ணவள்ளி கழுத்தில் அணிந்திருந்த 8½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.