ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

Update: 2021-09-10 21:22 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி 7-ந்தேதி 115 பேருக்கும், 8-ந்தேதி 117 பேருக்கும், நேற்று முன்தினம் 130 பேருக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள பட்டியலின்படி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 99 ஆயிரத்து 554 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 124 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 97 ஆயிரத்து 647 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 662 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 1,245 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்