மக்கள் நீதிமன்றம் மூலம் 54 வழக்குகளுக்கு ரூ.3 கோடிக்கு தீர்வு

கோபியில் மக்கள் நீதிமன்றம் மூலம் 54 வழக்குகளுக்கு ரூ.3 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2021-09-11 15:07 GMT
கோபி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. கோபி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜெகநாதன் தலைமை தாங்கி மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.
2-வது வகுப்பு மாஜிஸ்திரேட்டு விஸ்வநாத், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கீர்த்தனா, முன்னாள் மாவட்ட நீதிபதி செங்கோட்டையன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். அதில் 145 வழக்குகளில் 54 வழக்குகள் சமரசம் செய்யப்பட்டு ரூ.3 கோடியே 7 லட்சத்து 19 ஆயிரத்து 523-க்கு தீர்வு காணப்பட்டது.

மேலும் செய்திகள்