விநாயகர் சிலையை கரைக்கும்போது செம்பரம்பாக்கம் ஏரியில் தவறி விழுந்த எலெக்ட்ரீசியன் சாவு

விநாயகர் சிலையை கரைக்கும்போது செம்பரம்பாக்கம் ஏரியில் தவறி விழுந்த எலெக்ட்ரீசியன் சாவு.

Update: 2021-09-13 12:12 GMT
பூந்தமல்லி,

குன்றத்தூர் அடுத்த சம்பந்தம் நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது38), எலெக்ட்ரிசீயனாக வேலை செய்து வந்தார். நேற்று மாலை தனது 2 மகன்களுடன் விநாயகர் சிலையை கரைக்க செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றார். மகன்களை ஏரியின் 5-வது மதகின் அருகே நிறுத்தி விட்டு ஏரியில் விநாயகர் சிலையை கரைக்கும் போது திடீரென நிலைதடுமாறி ஏரியில் விழுந்தார்.

இதை பார்த்ததும் அவரது மகன்கள் அலறினார்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்க முயன்றனர். ஆனால் பாரதிராஜா ஏரியில் மூழ்கினார். இது குறித்து பூந்தமல்லி தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் மூழ்கி கிடந்த பாரதிராஜாவை் சடலமாக மீட்டனர்.

இதையடுத்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன பாரதிராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்