கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
கிணற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பேரையூர்,
சேடப்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டத்தை சேர்ந்தவர் அம்மாவாசி மகன் சிரஞ்சீவி (வயது 23). இவருக்கு கண் பார்வை குறைபாடு இருந்ததாகவும் மற்றும் நீச்சல் தெரியாத நிலையில் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்துள்ளார். தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்றில் இருந்து சிரஞ்சீவியின் உடலை மீட்டனர். இதுகுறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.