மண் திருடிய 2 பேர் கைது

மண் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-19 20:50 GMT
திருமங்கலம், 
கூடக்கோவில் அருகே நெடுமதுரை கண்மாய் பகுதியில் மண் திருடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மண் அள்ளிக் கொண்டிருந்த ஜே.சி.பி. மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். இவற்றின் ஓட்டுனர்கள் கல்லுப்பட்டியைச் சேர்ந்த போஸ் (வயது35), கணேசன் (42) ஆகிய 2 பேரையும் கைது செய்து கூடக்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்