கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-19 20:53 GMT
நாகமலைபுதுக்கோட்டை, 
நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலைக்குமார் மற்றும் போலீசார் கீழக்குயில்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் 2 பேர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது கீழக்குயில்குடியை சேர்ந்த பாண்டியன் மகன் காசிராஜன் (வயது 30) மற்றும் சுப்பையா மகன் பாண்டி என்பதும் அவர்கள் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்