வாடிப்பட்டி,
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பால தண்டாயுத பாணி என்பவரது மகன் கார்த்திக் (வயது 23). இவர் சமயநல்லூர் அருகே பரவையில் தங்கி நிலக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமாக சமயநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.