மது குடிக்க மகன் பணம் தராததால் கத்தியால் குத்தி தொழிலாளி தற்கொலை

மது குடிக்க மகன் பணம் தராததால் கத்தியால் குத்தி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-20 22:19 GMT
ஈரோடு 
மது குடிக்க மகன் பணம் தராததால் கத்தியால் குத்தி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
ஈரோடு சூளை அருள் வேலவன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). தறிப்பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இவருக்கு சந்தோஷ்குமார் (25), கவின் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மனைவி இறந்ததால் ராஜேந்திரன் மனவேதனை அடைந்தார். இதனால் தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வந்து அவரது மகன்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், வேலைக்கு செல்லாமல் அடிக்கடி அவரது மகன்களிடம் பணம் கேட்டு தொந்தரவும் கொடுத்து வந்ததாக தெரிகிறது.
பணம் தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் ராஜேந்திரன் தன்னுடைய மகன் சந்தோஷ்குமாரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜேந்திரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
தற்கொலை
இதையடுத்து வீட்டின் சமையல் அறைக்கு சென்று, காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து கத்தியால் தனது வயிற்றில் சரமாரியாக குத்திக்கொண்டார். இதைப்பார்த்த அவரது மகன் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் நேற்று உயிரிழந்தார்.
 இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்