கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி

Update: 2021-09-22 21:01 GMT
கொட்டாம்பட்டி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் மலைச்சாமி(வயது 55). விவசாய கூலி வேலை செய்து வந்தார். நேற்று பொன்னமராவதியில் உள்ள மகள் சத்யாவை பார்க்க மோட்டார் சைக்கிளில் மலைச்சாமி, அவருடைய மனைவி பூமாதேவி(45) இருவரும் சென்றனர். அப்போது கொட்டாம்பட்டியை அடுத்துள்ள குமுடராம்பட்டி விலக்கு அருகே நான்கு வழி சாலையை கடக்க முயன்றபோது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கணவன், மனைவி இருவரும் படுகாயமடைந்தனர். இவர்களை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மலைச்சாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் சதீஷ்குமார் என்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்