மேலூர், ச
மேலூர் அருகே உள்ள தும்பை பட்டியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த பழனியப்பன் (வயது50) என்பவரை மேலூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 359 லாட்டரி சீட்டுக்கள், 2, 600 ரூபாய் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.