ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-09-27 20:51 GMT
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 118 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று புதிதாக 117 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 1,586 ஆக உயர்ந்தது. இதில் 99 ஆயிரத்து 695 பேர் குணமடைந்தார்கள். நேற்று மட்டும் 127 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 1,221 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 670 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்