முன்விரோதத்தில் கத்திக்குத்து; வாலிபர் படுகாயம்

முன்விரோதத்தில் கத்திக்குத்து; வாலிபர் படுகாயம்

Update: 2021-09-29 19:00 GMT
திருமங்கலம்
உசிலம்பட்டி அருகே உள்ள வேப்பனூத்து கிராமத்தை சேர்ந்தவர் தங்கராமன்(வயது 26). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் பாலகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் தங்கராமன் பள்ளி அருகே அமர்ந்து இருந்தார் அப்போது அங்கு வந்த கண்ணன், அவருடைய மகன்கள் பாலகிருஷ்ணன், ஹரிஹரன் ஆகியோர் சேர்ந்து தங்கராமனை தாக்கினர். அப்போது ஹரிஹரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் தங்கராமனை முதுகு மற்றும் நெஞ்சில் குத்தியதாக கூறப்படுகிறது. தங்கராமனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஹரிஹரனை விலக்கி விட்டனர். தங்கராமன் பலத்த காயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்