கல்பாக்கம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

கல்பாக்கம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-30 09:14 GMT
கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கடலூர் காலனியை சேர்ந்தவர் சேகர். கூலித்தொழிலாளி. இவருக்கு குட்டியம்மாள் (வயது39) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக அவர் சரியான வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தார்.

போதிய வருமானம் இல்லாததால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது. இதனால் குட்டியம்மாள் விரக்தியடைந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் குட்டியம்மாள் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் அங்கிருந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கூவத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்