ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை காரை நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான் பால் (வயது 21). இவர் இன்று காரை கூட்ரோடு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார், ஜான்பாலை கைது செய்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.