சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 3 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

Update: 2021-09-30 19:37 GMT
மதுரை, 
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த சூரக்குண்டு பகுதியை சேர்ந்தவர் மாயழகு (வயது 48). கடந்த 2014-ம் ஆண்டு  இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.இது குறித்து மாயழகு மீது மேலூர் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு வழக்கு களுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
முடிவில் மாயழகு மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா நேற்று தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்