2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லையில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2021-10-01 19:55 GMT
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 47). பாளையங்கோட்டை மேலநத்தம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராமன் என்ற சரவணன் என்ற சைனா (26). இவர்கள் 2 பேரும் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் ஆகிய வழக்குகளில், மேலப்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடும்படி, நெல்லை மாநகர சட்டம்- ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், பாளையங்கோட்டை உதவி கமிஷனர் பாலச்சந்திரன் ஆகியோர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக் கண்ணனுக்கு பரிந்துரை செய்தனர். போலீஸ் கமிஷனர் அதனை ஏற்று மாரியப்பன், முத்துராமன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன், 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்