ஈரோடு மாவட்டத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 2 பேர் பலியானார்கள்.;

Update:2021-10-02 02:31 IST
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 269 பேருக்கு பரிசோதனை செய்ததில், 109 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 7 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 116 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 170 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். இதற்கிடையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 65 வயது பெண் மற்றும் 68 வயது ஆண் கடந்த மாதம் 29-ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 672 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்