புவனகிரியில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை கடன்தொல்லையால் விபரீத முடிவு

புவனகிரியில் கடன் தொல்லையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-02 17:32 GMT
புவனகிரி, 


 புவனகிரி இரட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுதமன்(வயது 63). தொழிலாளி. இவருக்கு கடன்தொல்லை இருந்தது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பி தரும்படி கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கவுதமன் மனமுடைந்து காணப்பட்டார்.

சாவு

சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர், விஷத்தில் தூக்கமாத்திரைகளை கலந்து குடித்து, மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்தனர். 

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி கவுதமன் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து அவருடைய மனைவி மஞ்சுளா புவனகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்