குண்டும், குழியுமான பழுதடைந்த தார்ச்சாலை

குண்டும், குழியுமான பழுதடைந்த தார்ச்சாலை

Update: 2021-10-03 16:08 GMT
முத்தூர், 
முத்தூர் அருகே வள்ளியரச்சலில் இருந்து தென்னக்கரைபாளையம்ய வரை உள்ள  குண்டும், குழியுமான பழுதடைந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று  பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
 தார்ச்சாலை
 முத்தூர் அருகே வள்ளியரச்சல் பஸ் நிறுத்தம் அருகில் மாந்தீஸ்வரர் கோவில் தென்புறத்தில் இருந்து தென்னங்கரைப்பாளையம் வரை செல்வதற்கு  தார்ச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தார்ச்சாலை  கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக  பல்லாங்குழி சாலையாக மாறிவிட்டது. மேலும்  2 கிலோ மீட்டர் தூரம் வரை தார்ச்சாலை எவ்வித பராமரிப்பும் இன்றி மண் சாலைகளாகவே மாறிவிட்டது.
இந்த பழுதடைந்துள்ள தார்ச்சாலையின் வழியே தினந்தோறும்  பல்வேறு கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.  விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருட்களை  கொண்டு செல்கின்றனர்.  இந்த தார்ச்சாலையின் இருபுறமும் முட்புதர்கள் அதிக அளவில் அடர்ந்து வளர்ந்து மண்டி காணப்படுகிறது. இதனால் தார்ச்சாலையின் இருபுறமும் புதர்கள் மூடிய நிலையில் மிகவும் குறுகலான சாலையாக தற்போது மாறி காணப்படுகிறது. இதனால் இந்த சாலையை பகல் மற்றும் இரவு நேரங்களில் எதிரெதிரே கடந்து செல்லும் வாகனங்கள் விபத்துக்களில் சிக்கி வருகின்றன.
சீரமைக்க வேண்டும்
 இந்த  சாலையில் வாகனங்களை ஓட்ட முடியாமல் அடிக்கடி  விபத்துகளில் சிக்கி அல்லல்படுகின்றனர். இதனால்  வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வருவதை காணமுடிகிறது.
இந்த சேதமடைந்த தார்ச்சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார்கள் தெரிவிக்கப்படும்  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே  குண்டும், குழியுமான பல்லாங்குழி தார்ச்சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சாலையின் இருபுறமும் உள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும் என்றும் கிராம பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்