தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
தூசி
சென்னை கிழக்கு தாம்பரம் ஆல்பர்ட் பொன்னுசாமி தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 45), கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி கயல்விழி (39). இவர்களுக்கு லோகேஷ் (18), கோகுல் (14) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
சந்திரன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கயல்விழி செய்யாறு தாலுகா கீழ் நேத்தப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது தாய்வீட்டுக்கு கோவில் திருவிழாவிற்காக குடும்பத்துடன் வந்துள்ளார். இன்று காலை வெளியில் சென்ற சந்திரன் நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை.
அவரை தேடியபோது அதே பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகார் மீது தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.