வாலிபருக்கு அரிவாள் வெட்டு

வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2021-10-03 17:49 GMT
திருப்புவனம், 
கீழச்சொரிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மனைவி அழகு. அழகு கீழச்சொரிக்குளம் ஊராட்சி யில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவரை நீக்கிவிட்டு இதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி சித்ரா என்பவரை வேலைக்கு சேர்த் துள்ளனர். இதனால் ஈஸ்வரனுக்கும், மீனாட்சி சுந்தரத்திற்கும் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு ஈஸ்வரன் வீட்டின் வெளியே இருக்கும்போது அங்கு வந்த மீனாட்சி சுந்தரம் அரிவாளால் ஈஸ்வரனை வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரன் மதுரை அரசு  மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து பழையனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்