சேவல் சண்டை நடத்திய 2 பேர் கைது

சேவல் சண்டை நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-10-03 18:21 GMT
கரூர்
கரூர் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் திருமுக்கூடலூர் அருகே உள்ள அமராவதி ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றுப்பகுதியில் சேவல் சண்டை நடத்திக் கொண்டிருந்த கட்டளையை சேர்ந்த அன்பரசு (வயது 29), வாங்கல் பகுதியை சேர்ந்த கண்ணன் (30) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்