தாயை தாக்கிய மகன் மீது வழக்கு
தாயை தாக்கிய மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி நீலா(வயது 46). இவர்களது மகன் விஜய்(24). கூலி தொழிலாளியான இவர் அடிக்கடி மது குடிப்பது வழக்கம் என்றும், இந்நிலையில் நேற்று விஜய் மது குடிப்பதற்காக நீலாவிடம் பணம் கேட்டதாகவும் தெரிகிறது. அதற்கு நீலா பணம் தர மறுத்ததால், அவரை விஜய் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நீலா ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் நீலா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.