சென்னை ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

விடுமுறை காலத்தில் சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-29 18:21 GMT

கோப்புப்படம்

சென்னை,

சென்னை ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மே 1 ம் தேதி முதல் ஜூன் 2 ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டில் மே மாதம், 8, 9-ந்தேதிகளில் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, கே.குமரேஷ்பாபு, ஆர்.கலைமதி ஆகியோரும், 15, 16-ந்தேதிகளில் நீதிபதிகள் பி.டி.ஆஷா, ஆர்.சக்திவேல், என். செந்தில்குமார் ஆகியோரும், 22, 23-ந்தேதிகளில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சி.சரவணன், பி.பி.பாலாஜி ஆகியோரும், 29, 30-ந்தேதிகளில் நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத், எஸ்.சவுந்தர், வி. லட்சுமி நாராயணன் ஆகியோரும் அவசர வழக்குகளை விடுமுறை காலத்தில் விசாரிப்பார்கள்.

இதேபோல ஐகோர்ட்டு மதுரை கிளையில் மே 8, 9-ந்தேதிகளில் நீதிபதிகள் பி.வேல்முருகன், அப்துல்குத்தூஸ், பி.தனபால் ஆகியோரும், 15,16-ந்தேதிகளில் பி.வேல்முருகன், பி.வடமலை, கே.ராஜசேகர் ஆகியோரும், 22, 23-ந்தேதிகளில் நீதிபதிகள் ஆர்.என். மஞ்சுளா, எஸ்.ஸ்ரீமதி, சி.குமரப்பன் ஆகியோரும், 29, 30-ந்தேதிகளில் நீதிபதிகள் ஆர். விஜயகுமார், எல். விக்டோரியா கவுரி, ஜி.அருள்முருகன் ஆகியோரும் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்

வாரம்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்