ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 91 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 91 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

Update: 2021-10-03 20:59 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 845 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 95 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிதாக 91 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 2,188 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 381 பேர் குணமடைந்தார்கள். நேற்று மட்டும் 103 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 1,135 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 672 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்