மல்லூர் அருகே பரிதாபம்: கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தற்கொலை-போலீசார் விசாரணை

மல்லூர் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2021-10-03 22:05 GMT
பனமரத்துப்பட்டி:
மல்லூர் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கொலை வழக்கில் கைது
மல்லூர் அருகே சந்தியூர் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த ரவி மகன் ரமேஷ் (வயது 27), கூலி தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு மே மாதம் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரும், அ.தி.மு.க. ஒன்றிய மகளிர் அணி தலைவியுமான சாந்தா (50) என்பவரை குத்திக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில்வெளியே வந்த அவர், தன்னுடைய தந்தையுடன் வசித்து வந்தார்.
தற்கொலை
இதற்கிடையே ரமேஷ் நேற்று முன்தினம் இரவு சந்தியூர் ஆட்டையாம்பட்டி செல்லும் வழியில் கருப்பனார் கோவில் அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
ரமேஷ் சாவு பற்றி மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்