லாரி மோதி வாலிபர் சாவு; 2 பேர் படுகாயம்

உசிலம்பட்டி அருகே லாரி மோதியதில் வாலிபர் இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-10-05 22:01 GMT
உசிலம்பட்டி, 

உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டியை சேர்ந்தவர் போஸ். இவருடைய மகன் பால்பாண்டி (35). இவரும் இவருடைய நண்பர்களுமான இதே ஊரை சேர்ந்த பிரபு (36), அலெக்சாண்டர் (35) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் உசிலம்பட்டிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். வெள்ளைமலைப்பட்டியில் உள்ள வேகத்தடையில் சென்ற போது முன்னால் சென்ற லாரி மீது ேமாட்டார் சைக்கிள் மோதியது. இதில் பால்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரும் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை உத்தப்பநாயக்கனூர் போலீசார் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்