மேலூர்,
மேலூர் அருகே உள்ள தெற்குதெரு கிராமத்தை சேர்ந்த பூமிநாதன் என்பவரது மகன் சூர்யா (வயது 20). இவர் அதே ஊரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்தார். சூர்யாவும் அவரது நண்பர் கல்லம்பட்டியை சேர்ந்த யாசர்அரபாத்தும் (20) மோட்டார் சைக்கிளில் நான்குவழி சாலையில் வெள்ளரிப்பட்டிக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த வழியே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காயமடைந்த இருவரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா இறந்தார். யாசர்அரபாத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.