மதுரை ஆயுதப்படை போலீஸ் துணை கமிஷனர் சென்னைக்கு இடமாற்றம்

அரை நிர்வாண வீடியோ ஏற்படுத்திய சர்ச்சை தொடர்பாக மதுரை ஆயுதப்படை போலீஸ் துணை கமிஷனர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

Update: 2021-10-07 18:17 GMT
மதுரை, 

அரை நிர்வாண வீடியோ ஏற்படுத்திய சர்ச்சை தொடர்பாக மதுரை ஆயுதப்படை போலீஸ் துணை கமிஷனர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

வீடியோ சர்ச்சை

மதுரை மாநகர் ஆயுதப்படையில் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றியவர் சோமசுந்தரம்.
டிக்-டாக் செய்தது, போலீசாரை அவரது சொந்த வேலைக்கு பயன்படுத்தியது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீஸ் துணை கமிஷனர் சோமசுந்தரம், டவுசர் மட்டும் அணிந்து கொண்டு எண்ணெய் மசாஜ் செய்த படியும், அருகே மது பாட்டில்கள் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது.
மேலும் அந்த வீடியோவில், போலீஸ்காரர் ஒருவரை புல்லாங்குழல் வாசிக்க வைத்து அதனை துணை போலீஸ் கமிஷனர் சோமசுந்தரம், அரைநிர்வாணத்துடன் அமர்ந்து ரசிப்பதுமான காட்சிகளும் உள்ளன. இது மற்றொரு சர்ச்சையாகவும் மாறியது. இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா. துணை கமிஷனர் சோமசுந்தரத்திடம் விசாரணை நடத்தினார்.

சென்னைக்கு இடமாற்றம்

அதன் பின்னர் போலீஸ் கமிஷனர் இதுதொடர்பாக தமிழக டி.ஜி.பி.க்கு அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தமிழக டி.ஜி.பி. உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில் போலீஸ் துணை கமிஷனர் சோமசுந்தரம் சென்னை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதை தொடர்ந்து மதுரை மாநகர் தலைமையிடத்து துணை கமிஷனர் ஸ்டாலினுக்கு, ஆயுதப்படை துணை கமிஷனர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்