‘நீட் தேர்வு ரத்து’ என வாக்குறுதி அளிக்க தடை கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

‘நீட் தேர்வு ரத்து’ என வாக்குறுதி அளிக்க தடை கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

Update: 2021-10-09 21:11 GMT
மதுரை, 

ராமேசுவரத்தை சேர்ந்த வெற்றிவேல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் நீட் தேர்வு நடத்தப்படாது என தற்போதைய தி.மு.க. அரசு கூறியிருந்தது. ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12-ந்தேதி நடைபெற்றது.
தமிழகத்தில், நீட் தேர்வு தடை செய்யப்படும் என அளித்த உறுதியே மாணவர்களின் மன குழப்பத்திற்கும், சிலர் தற்கொலை செய்து கொண்டதற்கும் காரணம்.
எனவே தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொது இடங்களில் வாக்குறுதிகளை வழங்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்கவும், மன அழுத்தத்துக்கு ஆளான மாணவர்களுக்கு தலா ரூ.5 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்