புதுப்பெண் தற்கொலை

புதுப்பெண் தற்கொலை

Update: 2021-10-10 14:03 GMT
கோவை

திருப்பூர் பி.என்.ரோடு நெசவாளர் காலனியை சேர்ந்தவர் அண்ணா துரை. இவருடைய மகள் இலக்கியா (வயது 27). இவருக்கும், கோவை ராமநாதபுரம் காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராம் பிரகாஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் சில மாதங்களிலேயே கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த இலக்கியா கடந்த மார்ச் மாதம் கணவரிடம் கோபித்துக் கொண்டு திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.


அங்கு பெற்றோர், இலக்கியாவை சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் திருப்பூரில் உள்ள குலதெய்வ கோவில் வழிபாட்டிற்கு வருமாறு ராம்பிரகாஷ் குடும்பத்தி னரை நேற்று முன்தினம் அண்ணாதுரை அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் திருவிழாவிற்கு செல்ல வில்லை என்று தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த இலக்கியா வீட்டில்தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த ராமநாதபுரம் போலீசார் விரைந்து சென்று இலக்கியாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி ஒரு ஆண்டு மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்