கடையில் திருட்டு
கடையில் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை,
மதுரை தல்லாகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது49). இவர் தல்லாகுளம் பஸ் நிறுத்தம் பகுதியில் டீ கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு கடையை மூடி விட்டு சென்றவர் மறுநாள் காலை வந்துள்ளார். அப்போது கடையின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த ஆயிரத்து 620 ரூபாய் மற்றும் சிகரட் பண்டல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடப்பட்டு இருந்தன. இது குறித்து மணிகண்டன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.