வாலிபர் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு

வாலிபர் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-10-13 16:52 GMT
மதுரை, 
மதுரை நாகமலைபுதுக்கோட்டை, சுப்பிரமணிய சிவா தெருவை சேர்ந்தவர் லின்சிஜோன்ஸ் (வயது 39). சம்பவத்தன்று இவர் காளவாசல் பை-பாஸ் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் பையில் வைத்திருந்த 3 லட்சம் ரூபாயை மர்மநபர் திருடி சென்று விட்டார். 
இது குறித்து அவர் கரிமேடு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்