திசையன்விளை:
திசையன்விளை அருகே நாடார் அச்சம்பாடு முத்தாரம்மன் கோவிலில் 119-வது மாதாந்திர திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி கணபதி, சரஸ்வதி, லட்சுமி, முருகன், முத்தாரம்மன் துதி பாடல்கள் பாடப்பட்டது. பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி சுலோகங்கள் சொல்லி அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.