ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா; மூதாட்டி பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மூதாட்டி பலியானாா்.

Update: 2021-10-13 20:08 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 261 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிதாக 82 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 958 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 1,350 பேர் குணமடைந்தார்கள். நேற்று மட்டும் 78 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 930 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயது மூதாட்டி கடந்த 9-ந் தேதி இறந்தார். இதனால் மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 678 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்