திருவள்ளூரில் தூய்மை கணக்கெடுப்பு தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

திருவள்ளூரில் தூய்மை கணக்கெடுப்பு தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது.

Update: 2021-10-14 21:01 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தூய்மை கணக்கெடுப்பு 2021 தொடர்பாக மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் கருத்து பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) சர்குணா, மகளிர் உதவி திட்ட அலுவலர் சாந்தி, முதன்மை மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்