2 தினங்களில் 43 பேருக்கு கொரோனா

மதுரையில் நேற்று, நேற்று முன்தினம் என 2 தினங்களில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

Update: 2021-10-15 20:20 GMT
மதுரை, 

மதுரையில் நேற்று, நேற்று முன்தினம் என 2 தினங்களில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 25 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 74 ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், 2 தினங்களில் 52 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 32 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 73 ஆயிரத்து 524 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 250 ஆக குறைந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 59 வயது ஆண் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1169 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்