லாரியின் அடியில் சிக்கி தொழிலாளி சாவு

டி.கல்லுப்பட்டி அருகே லாரியின் அடியில் சிக்கி ெதாழிலாளி இறந்தார்.

Update: 2021-10-15 20:25 GMT
பேரையூர்,

மதுரை மாவட்டம் வன்னிவேலம்பட்டியை சேர்ந்தவர் தங்கமுடி (வயது 32). இவர் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள சோலைபட்டி விலக்கில் உள்ள மர அறுவை மில் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். ஆயுதபூஜை அன்று அங்குள்ள லாரியை தங்கமுடி சுத்தம் செய்து கொண்டிருந்தார். லாரியின் லிவரை தூக்கிவிட்டு லாரியை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது திடீரென்று தூக்கி நிறுத்தப்பட்டிருந்த லாரி தங்க முடியின் மீது அமுக்கியது. இதில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இறந்த அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதுகுறித்து கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்