மினி லாரியில் மணல் கடத்த முயற்சி; 2 பேர் மீது வழக்கு

ஆறுமுகநேரி அருகே மினி லாரியில் மணல் கடத்த முயன்றதாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update:2021-10-16 18:33 IST
ஆறுமுகநேரி:
ஆத்தூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலாத்தூர் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மணல் அள்ளுவதாக தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.
அங்கு போலீசாரை கண்டதும் மினிலாரியில் இருந்த இருவர் தப்பி ஓடிவிட்டனர். அங்கு நின்ற மினி லாரி முழுவதுமாக மணல் நிரப்பப்பட்டு நின்றது. அவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் இதுதொடர்பாக குரும்பூர் மயிலோடையை சேர்ந்த நடராஜன் மகன் பாஸ்கர், நல்லூர் பிள்ளைமார் தெருவை சேர்ந்த சுடலைமுத்து மகன் சங்கர் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் அய்யப்பன் விசாரணை நடத்தி, இருவரையும் தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்