ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 97 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 97 பேருக்கு தொற்று உறுதியானது.

Update: 2021-10-16 20:47 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 7 ஆயிரத்து 336 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 91 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று புதிதாக 97 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 3 ஆயிரத்து 196 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 1,610 பேர் குணமடைந்தார்கள். நேற்று மட்டும் 94 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 908 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு இதுவரை மொத்தம் 678 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்