அங்கன்வாடி பணியாளர் தற்கொலை

அங்கன்வாடி பணியாளர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-10-17 16:11 GMT
வாடிப்பட்டி, 
சமயநல்லூர் செக்கடி தெருவைச் சேர்ந்தவர் கோகிலா (வயது 52). இவர் பரவை ஊர்மெச்சிகுளம் நந்தவனம் அங்கன்  வாடியில் சமையல் உதவியாளராக பணி செய்து வந்தார். தீபாவளி சீட்டு பிடித்ததில் கடன் ஏற்பட்டு மன உளச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமாக சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்