போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-17 16:20 GMT
மதுரை, 
மதுரை புறநகர் பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் 16 வயது பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வாலிபர், அந்த சிறுமியை திருமணம் செய்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நல குழு உறுப்பினர் பாண்டியராஜா, தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்