ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம் திருட்டு

விருதுநகரில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம் திருடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-10-17 18:21 GMT
விருதுநகர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நொச்சிகுளத்தைச் சேர்ந்தவர் பூமாதேவி (வயது 47). இவர் விருதுநகர் காந்திபுரம் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து தனது உறவினர் ஹரிபிரசாத் என்பவரிடம் இருந்து சீட்டுப்பணம் ரூ.90 ஆயிரத்தை பெற்று தனது பையில் வைத்துக்கொண்டு தனியார் பஸ்சில் ஊர் திரும்பினார். விருதுநகர் சிவகாசி ரோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது தனது பையில் இருந்த பணத்தை பார்த்த போது பணம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்