தீயில் கருகி இளம்பெண் சாவு

மதுரையில் தீயில் கருகி இளம்பெண் பலியானார்.

Update: 2021-10-18 20:29 GMT
மதுரை,

மதுரை ஆனையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துவீரன். இவரது மனைவி பிரியா (வயது 30). சம்பவத்தன்று இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீ பிடித்தது. இதில் உடல் கருகிய அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் பிரியா பரிதாபமாக இறந்தார்.

மேலும் செய்திகள்