ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

Update: 2021-10-19 21:39 GMT
ஈரோடு
சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 3 ஆயிரத்து 440 ஆக உயர்ந்தது. இதற்கிடையில் நேற்று முன்தினம் 7 ஆயிரத்து 644 பேருக்கு பரிசோதனை செய்ததில் 88 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 88 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 1,883 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 679 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 878 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்