தூக்குப்போட்டு புதுமாப்பிள்ளை தற்கொலை
மேலூர் அருகே தூக்குப்போட்டு புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
மேலூர்,
மேலூரில் உள்ள கோமதியாபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் யுவராஜ் (வயது 25). இவர் வெள்ளரிப்பட்டியில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் வேலை பார்த்துவந்தார். இவருக்கு அடுத்தமாதம் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் தனி அறையில் தூங்க சென்றார். அங்குள்ள மின்விசிறியில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.