விபத்தில் முதியவர் சாவு

விபத்தில் முதியவர் சாவு

Update: 2021-10-25 20:33 GMT
மேலூர்
மேலூர் அருகே பூசாரிபட்டி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் அய்யணன் (வயது 71). இவர் கீழவளவு பகுதியில் உள்ள செம்மனிப்பட்டியில் அவரது வயலில் நெல் பயிரிட்டு விவசாய வேலைகளை பார்த்து வந்தார். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மேலூர் நோக்கி வந்தவர் நாவினிப்பட்டி அருகே நிலை தடுமாறி விழுந்து காயமடைந்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்